Post

வாழ்க்கை தன் அளவில் முழுமையானது

In Uncategorized on January 10, 2012 by samratashok

பல பிரச்சனைகளுக்கு உள்ளே தெருவில் நடந்து செல்லும் போது . ஏதோ சிந்தனையில் தொலைந்து போய் சென்று கொண்டு இருப்பேன் .

சட்டென்று சிறு குழந்தைகள் ஓடி செல்வதை காண்பது , என் எல்லா சோகங்களையும் அர்த்தமிழக்க செய்யும் . 
வாழ்க்கை நாம் நினைக்கும் அளவுக்கு சிரமமானது இல்லை என்று சொல்லும் அந்த துள்ளல் நடை குழந்தைகளுக்கு . 
ஒரு மாபெரும் மன எழுச்சி , அப்படியே பார்த்து கொண்டே இருப்பேன் . ஆனந்தம் கரைபுரண்டு கண்ணீராய் வெளிப்படும் தருணம் . 
அவர்களுக்கு எதுவும் பெரிய விஷயம் இல்லை , இந்த நொடியில் முழுமையாக வாழும் ரகசியம் குழந்தைக்கு மட்டும் தான் இயற்கையால் 
வழங்க பட்டுள்ளது . ஏதோ ஒரு வயதில் அதை நாம் இழந்து விடுகிறோம் . 
 
ஜெயமோகன் தன்னுடைய பல கட்டுரைகளில் வாழ்க்கை பற்றி கூறும் போது ஒரு வரி, “வாழ்க்கை தன் அளவில் முழுமையானது” என்று ‘ எவ்வளவு நிஜமான ஒரு அவதானிப்பு . 
 
மாபெரும் உலக இலக்கியமான போரும் அமைதியும் புத்தகத்தில் இப்படி ஒரு இடம் வருகிறது , அன்ட்ரூ  வாழ்கையின் பல சோகங்களை சந்தித்தவன் , தன்னுடைய இளம் மனைவி இறந்த  பிற்பாடு ,  ஒரு மிக பெரிய வெறுமை உணர்வு சூழ வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.தற்செயலாக ஒரு விருந்தில் நடாஷா என்று ஒரு தேவதை போன்ற பெண்ணை சந்திக்க நேர்கிறது.இவன் தங்கி இருக்கும் அறைக்கு நேர் மேல் அறையில் நடாஷா தன்னுடைய தோழியுடன் இரவில் பேசி கொண்டு இருக்கிறாள் . 
அன்ட்ரூ தூக்கம் வராமல் இருக்கும் காரணத்தால் இவர்கள் பேசுவதை கேட்கிறான் . 
 
நடாஷா தன் தோழியுடன் அன்று , அந்த கரிய இரவில் வெண்மையே உருவான  மிகவும் பிரகாசமான முழு நிலவின் அழகை வர்ணிக்கிறாள் . அவள் கொள்ளும் மன எழுச்சியின் உச்சத்தில் ,  கூறும் வரிகள் 
 
“இந்த நிலவை பார் , இந்த ஜன்னல் மேல் நின்று வான் நோக்கி குதித்தால் நிலவை தொட்டு விட முடியுமல்லவா ? 
ஒரு நாள் இதை அன்ட்ரூ பார்க்க நேரும் , அவன் சோகங்கள் மறைந்து அவன் மீண்டு சிரிக்க நேரும் ?” 
 
இதை கேட்டு கொண்டு இருக்கும் அன்ட்ரூ , அவளை சந்திக்க நேரும் போது கேட்கிறான் , உன்னால் எப்படி எப்போதும் வாழ்க்கையை முழு 
உயிர்ப்போடு வாழ முடிகிறது ? 
 
இதை போன்ற ஒரு காட்சி , கரைந்த நதி நாவலிலும் வருகிறது , ரமேஷ் சந்திரன் மிக பெரிய வேலை சிக்கல்களில் மூழ்கி சாலையில் நடக்கும் போது ஓடி வரும் ஒரு சிறுமியை காண்கிறான் . இந்த நொடியை இவள் அளவு தீவிரத்துடன் வாழு முடியுமா என்று உவகை கொள்ளுகிறான் . 
 

Post

Muddy River

In Uncategorized on January 9, 2012 by samratashok

Political fiction ideally tries to uncover the intricacies behind a complex political problem .
Layers of humanity that is ever present in any problem that seems to be unsolvable .
As we digest endlsee punditry from our news media on problems like Kashmir or North east we tend
to understand things in abstract .

P.A Krishnan’s muddy river tries to unravel the layers of humanity under all our skins .
Set in the backdrop of assameese insurgency , a honest official tries to rescue a kidnapped coworker
from an assam based terrorist group .

The novel has an interesting form , wherein Ramesh Chandran senior beuracrat writes a novel on his effore to rescue the kidnapped coworker Mr.Ghosh . Muddy river flows through the manuscripts of novel written by Ramesh shared by Sukanya , Ramesh’s wife to his friends who are themselves part of the novel .

The language of the novel is easier and the form adds a taught narrative with interesting incidents.

One cannot stop wondering at the differnce in reality and the one we percieve as reality from what we see in news media in understanding political problems . Ramesh one of a honest beuracrat , the frustrations of his endeavours to rescue Ghosh . We feel the anguish at Ramesh’s culdesac’s , his honest and at times his bull dog like approach is inspiring .

The novel is emotional especially when Ramesh thinks about her daughter Priya’s loss .
The deep vibrations a husband and wife share after the loss of a loved one , especially the guilt in facing life as such .Yet Love is visible between the two , as the writer has put it aptly there is love that is felt through silence .

Gandhi is evidently visible throughout the book . The conversation that Anupama and Sukanya have through the novel remainds the absurdity of grouping people . If we are ever to be a group , every individual is a group in itself so different to lump together .

There are some amazing character shades that are original to the book , especially that of Ramesh .
The marxist turned Gandhian , (I think this is true to many of us :) ) honest and ever trying to make a meaningful life out of a corrupt society . He seems to have lost hope in humanity , sounds dejected and yet tries so hard to perform his karma . As one ages I guess there is no other way other than being a Karmayogi just try to do your karma .

Sukanya , Ramesh’s wife she comments on her husbands novel time and again . She initially feels let down that she is not a big character in the novel . I think Ramesh’s inspiration comes from her , remainded me of som many of our mothers who toil so hard yet are so simple and plain .

Anupama was very mysterious and the finale made her even more intriguing . I am still thinking about her and the relation Ramesh had with her .

The high point of the novel its the hope it carries and inspite of being to handle people who lack even a iota of truthfulness day in and day out . Ramesh is sans cynicism , finds inspiration in reading Gandhi’s talisman tries to be sincere to his beliefs and hope for change . I feel it may not be the greatest of ways to bring about a change , but its the least destructive we can afford .
The dreams I had when I was eighteen , of a Marxist revolution seems a long time now .

Post

Hampi Trip

In Uncategorized on December 26, 2011 by samratashok

ImageHampi Trip :

I have been to hampi over the last weekend . On first look anyone will observe the boulders made of Mountains. The whole terrain is filled up with the curious pattern of boulders big and small. They are so precariously arranged you may wonder you can disturb the whole thing by rolling one of them. They are attributed to the erosion due to the flow of rivers for millions of years. Hampi as is not just famous for its landscape , its a land of gods , myths , stories , of the splendor of the vijayanagara empire . Its just not that its about the great dreams that humans conjure and the meaninglessness time makes out of it . 

Once a seat of imperial majesty , a stupendous achievement in art , the amazing sculptors now much like a lost child . As time flows by it seems as if Hampi being left alone at one side , and as you observe the buzzing tourist business you wonder whether it was left alone as people say. 

Its a curious imagery seeing those magnificent temples , the remains are so amazing that you cannot control yourself asking this question , how great this city would have looked . As with most historical events there is no logic attributed to events , they are want they are and how they turned out to be. 

The fascinating temples , the statues speak to us of a time , a time wherein they were erected with all the glory to be destroyed eventually . If you want to metamorphically express the event of a pralayam , there is no place better to capture this than Hampi. 

As we were travelling through the city we were trying to guess the various meanings and plausible explanations of the monuments we saw . We were constantly trying to unravel a mystery hidden deeply inside time. 

The temples were characteristic of the vijayanagara empire with pillared mandapams , the characteristic Yaali in all its glory . The sheer variety of the temples sculptures will leave u gasping for breath . The nature of any classic art is there is very little room for variance , but still the artist achieves glory through the finesse he expresses in it. They look all the same yet they are so different.  Even in Hampi the quality of sculptures is so different when you see it at the virupaksha temple and compare it with the Vijaya Vitala temple although they are the very same forms. 

The ruins of hampi remained me of climax of Vishnupuram a novel by Jeyamohan. In this novel the city of vishnupuram being a royal seat of power , a rich center of culture and knowledge meets eventual destruction much like how the Diwali flower pot having burnt and illuminated expressed all its joy extinguishes in a moment. If you observe the left out casing the next day of Diwali you wonder whether is this the same thing that produced the same happiness and illumination ? Where in all the happiness gone ? The very same question was lingering in my minds as I made my travel back home…

Post

War and Peace – I

In General on December 5, 2011 by samratashok

Note:I have read about 60% of this book in Kindle .

What is history all about , if we have to go in time forward or backward and look from there ,  those meaningless actions committed by us , constitute this magic word called history .

Some branded as winner , some looser, but these are all in the hindsight . At present there is only Life unfolding itself as a blanket on top of time .

War and Peace by Tolstoy speaks about History , hence to comprehend history it speaks about people , the innumerable questions that every man faces , the solutions he arrives at to carry on living in this uncertain world . Any great work of art at some depths speaks about same age old questions and quagmire . The very same questions posed by the rig vedic saint , when he asked ‘what is this all about ? ‘

The novel is set in Russia around the time where Napoleon Bonaparte is making ambitious plans to conquer the whole world . He is rumored to be going to wage a war on Russia , and there is apprehension in the Russian aristocratic families . The novel broadly has two parallel themes and the dialectics between them  . One major theme is the unending war that keeps happening and the subsequent impact it has on the family lives of five aristocratic families .

Tolstoy craft lies in able to bring in the major themes and in the same way speak in detail about even the minute characters . He can speak about how Napoleon was defeated by factors no one truly controlled , out of sheer fortuitousness , and also he can masterfully craft the love between Natasha and Anatole . Tolstoy can talk about the beauty of a water drop and the vastness of the ocean with similar  poise .

War and Peace is not just a story of a single character or a life journey of a person . Its the story of time , time doesn’t brand someone as hero or a villain . War and Peace so much difference in its character , their lives . It also has ‘chance’ playing a vital role . Traditional historic novels we have read of are novels that speak about the bravery of a single king in winning a war . As if he was the whole guiding force behind the events that have unfolded . Tolstoy breaks this complete cliched narration , for instance on explaining the defeat of Napoleon at the hands of Russia in Moscow . He feels that no one really controlled , it was an act that happened by chance .

The ups and downs of the character Prince Andrew is the high point of the story . He starts of as an youthful and brave warrior . To attain the same greatness as Napoleon has achieved in the battlefield .Lying injured on the battlefield , the revelation of the absurdity of human actions while he sees the calm clouds passing in the blue sky .

The novel is filled with poetic experiences, the masterful and in-depth look into human psycology . For instance the characterization of Pierre in this Novel is another high point of Tolstoy powers of observation , his understanding of human behavior .

Tolstoy’s character continously thrives and seeks for the greater bliss , constantly hits dead ends . The novel shows a landscape of  human behavior . We can laugh and cry at the various manifestations of life , travel with Tolstoy through this wonderful garden of life .

Post

மலர் மாலை தேசம்

In Uncategorized on October 27, 2011 by samratashok

இன்று உதயாவிடம் பேசி கொண்டு இருந்தேன் , அப்போது அவள் சொன்ன விஷயம் ஆச்சரியம் அளித்தது . அமெரிக்காவில் இருக்கும் அவள் அண்ணனுக்கு தீபாவளிக்கு விடுமுறை இல்லை என்று சொன்னால் . அமெரிக்கா ஒரு கிருத்துவ தேசம் என்பது சட்டென்று புத்தியில் உரைத்தது ,
அதன் அரசாங்க அமைப்பு கிறித்துவ அடிப்படையில் அமைந்தது . உழைக்க யார் வேண்டுமானாலும் அங்கே செல்லலாம் , அவர்கள் ஒரு போதும் அமெரிக்கர் அல்ல , அமெரிக்க வாழ் இந்தியர்கள் , இல்லை இந்திய வம்சாவழியினர் அவ்வளவே . மாறாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கே பல்புடுங்க வந்த சீனர்கள் இந்தியரகளாகவே வாழ்கிறார்கள் .

வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா இந்தியா ஒரு salad தேசம் என்கிறார் . மாறாக இந்த தேசம் ஒரு மலர் மாலை போன்றது , அந்த மாலையை தொடுக்க பயண பட்ட அனைத்து மலர்களும் தன் இயல்பை இழப்பதில்லை . மாலை என்று ஒரு தொகுப்பு வடிவமும் இந்த தேசத்துக்கு உண்டு .

இந்த நாட்டின் இரண்டு விஷய்னகளுக்காக நான் பெருமை படுவேன் , ஒன்று பல்வேறு மதங்கள் வாழும் இந்த நாடு , எல்லா மதங்களுக்கும் சம உரிமை அளிக்கும் அரசியில் சாசனம் . இந்த நாட்டு மக்களின் பெரும்பான்மையினர் பிற மத நம்பிக்கைகளை மதிப்பவர்கள் .

இன்னொன்று , இங்கே செயலில் இருக்கும் ஜனநாயகம் . கடந்த அறுபது ஆண்டுகளில் நாம் ஒரு செயல்படும் அரசியல் ஜனநாயகமாக இருக்கிறோம் . இந்த நாடு சுதந்திரம் அடைந்த முதல் நாளில் இருந்தே அனைவருக்கும் சம உரிமை அளித்து – அனைவருக்கும் ஒரு வாக்கு .
இது ஒரு சாதனை தான் . பிற எந்த தேசத்திலும் செய்யபடாத ஒன்று .

இரு பெரும் மனிதர்களை இங்கு எண்ணி பார்கிறேன் ,

நேரு போன்ற ஒரு தீர்கதரிசி நமக்கு கிடைத்தது ஒரு பெரும் வர பிரசாதம் . இந்தியா ஒரு ஹிந்து பாகிஸ்தானாக கூடாது என்பதில் மிகவும் குறியாக இருந்தவர் நேரு . அவர் வாழ்நாள் முழுவதும் மத-நளினகத்தின் முகமாக செயல்ப்பட்டார். அவர் தான் நவீன இந்தியாவின் ஜனநாயக அமைப்புகளை கட்டி எழுப்பியவர் . அவரின் செல்வாக்கில் யார் இருந்தாலும் இந்தியாவில் ஒரு சர்வாதிகாரத்தை நிருவ-முயற்சித்து இருப்பார்கள் . ஒரு கால கட்டத்தில் கூட தன் மக்கள் செல்வாக்கை தவறாக பயன் படுத்தியவர் அல்ல நேரு . ஜனநாயக விழிமியங்களை மதித்தல் , இந்த நாட்டில் உள்ள சிறுபாண்மை சமூகங்களின் உரிமையை காப்பதில் அவர் ஆற்றிய பங்கு என்பது மிக முக்கியமானது . அதனால் தான் இந்தியாவின் பன்முக தன்மையை அழிக்க செயல்படும் ஹிந்துத்வா அமைப்புகள் இன்றும் கூட அவரை கடுமையாக தாக்குகிறார்கள் .

அம்பேத்கார் போன்ற ஒரு scholar நம் அரசியல்அமைப்பு சட்டத்தை வடிவமைத்தது இன்னொரு வரபிரசாதம் . இந்தியா போன்ற முரண்பாடுகளை சுமந்துள்ள ஒரு நாட்டில் , இன்னும் நவீன சிந்தனைகள் வேர் பிடிக்காத ஒரு கால கட்டத்தில் , அவர் முக்கியமான சட்டங்களை கொண்டு வந்தார் . ஆனால் அதனை மக்கள் மன்றத்தில் எடுத்து செல்ல நேரு தேவைப் பட்டார் .

இவர்கள் இருவரையுமே தேர்வு செய்ததில் காந்திக்கு பெரும் பங்கு உண்டு .

Post

பருவம் நாவல்

In Uncategorized on October 8, 2011 by samratashok

மகாபாரதம் நாம் அனைவரும் கேட்ட  கதை தான் , இந்த மண்ணில் வாழும் அனைவரும் ஒரு முறையாவது கேட்டு இருப்பார்கள் , இன்று மகாபாரதம் ஒரு புராண கதையாக நமக்கு கிடைகிறது . கடவுள்கள் , வரங்கள் , சாபங்கள் நிறைந்தது இந்த புராணம் . கண்டிப்பாக காலம் தோறும் மகாபாரதம் மாறி வந்து இருக்கும் . புது புது கிளை கதைகள் இணைந்து இருக்கும் , காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கும் .

மகாபாரதத்தின் காலம் எனபது இந்தியா ஒரு பழங்குடி சமூகத்தில் இருந்து மேல் எழுந்து ஒரு நில உடமை சமூகமாக மாறும் கால கட்டம் . பெரும் அரசர்கள் உருவாகும் ஒரு காலத்தை காட்டுகிறது . அதற்கே உண்டான அற விழிமியங்களை பற்றி பேசுகிறது .  பெரும் தெய்வங்களான சிவனும் விஷ்ணுவும் உருவாக தொடங்கி உள்ள காலமாகவே பார்க்க முடிகிறது .  ரிக் வேத காலத்தில் அக்னியும் , இந்திரனும் தான் பெரும் தெய்வங்கள் . விஷ்ணு என்று நாம் இன்று அறியும் கடவுள் மூன்று தனி நம்பிக்கைகள் உள்ளிழுத்து கொண்டு உருவானது . எஸ் . எள் ப்ய்ரப்பா இந்த மகாபாரத கதையை அதன் புனித தன்மையை கலைத்து விட்டு ஒரு வரலாற்று நிகழ்வாக , ஒரு நாவலாக எழுதி இருக்கிறார் .
பருவா என்று கன்னடத்தில் வெளியான இந்த புகழ் பெற்ற நாவல் தமிழில் பருவம் என்று பாவண்ணன் அவர்காளால் மொழி பெயர்க்க பட்டுள்ள ஒரு மாபெரும் நாவல் .

கதை தொடங்கும் காலம் மகாபாரத யுத்தம் நிகழ உள்ளது . அதற்க்கான தயாரிப்பு ஏற்பாடுகளில் பாண்டவர்களும் , கௌரவர்களும் இருக்கிறார்கள் . முக்கியாமான கதை மாந்தர்கள் குந்தி , பீமன் , திரௌபதி , அர்ஜுனன் , யுயதனன் , பீஷ்மர் , துரோணர் போன்றவர்களின் என்ன ஓட்டங்களால் முன்னகர்கிறது .

நாவல்  நாம் மரபாக அறிந்துள்ள தகவல்களை மறு அமைப்பு செய்கிறது. உதாரணமாக பாண்டுக்கு  குழந்தை இல்லாததற்கு காரணம் அவன் ஆண்மையை இழந்தது தான் அன்றி முனிவரின் சாபம் இல்லை . குந்தி வரம் வாங்கி குழந்தை பெற்று கொள்ள வில்லை , நியோக முறையில் இன்னொரு ஆணுடன் உறவு கொண்டே பிள்ளைகள் பெற்று எடுக்கிறாள் . குந்திக்கு நியோகம் செய்யும் ஆண்கள் தேவர் லோகம் என்னும் ஒரு பகுதியை சேர்ந்தவர்கள் வானத்தில் இருந்து வரும் தேவர்கள் அல்ல . இதை போல் நாம் தெரிந்த தகவல்களை மறு புரிதலுக்கு உண்டாக்கும் இந்த நாவல் .

திரௌபதி எப்படி ஐந்து ஆண்களை மணந்து கொண்டால் , அவள் எப்படி அவர்களுடன் உறவு கொண்டால் போன்று விஷயங்களை புனைவின் சாத்தியங்களுடன் எழுதி உள்ளார் . இந்த நாவல் நடைமுறை எதார்த்தத்தை பற்றி பேசும் இடங்கள் பெரும் நம்பக தன்மையுடன் எழுத பட்டுள்ளது .

கதையின் கதாபாத்திரத்தின் உளவியல் அமைப்பை விவரிக்கும் இடங்களில் , அவர்கள் நமக்கு நெருங்கிவிடுகிரார்கள் . பீமன் தர்மன் பகடை விளையாடியதை கடுமையாக கண்டிக்கிறான் . அவன் வாயிலாக நமக்கு கதை விவரிக்க  படும் போது நாமும் அந்த கோபத்தை உணர்கிறோம் . பிறகு அதை அர்ஜுனன் அவன் தரப்பு நியாயங்களுடன் விளக்குகிறான் . இப்படியே பலரின் வாக்குமுலமாக கதை நகர்கிறது . அவர் அவரின் மனசாட்சி பேசும் நியாயங்கள் .

யுத்தம் முடியும் பகுதி ஒரு மிக பெரிய உணர்ச்சி பிரளயம் வெடிக்கிறது எல்லோர் மனங்களிலும் .

எங்கு பார்த்தாலும் பிணங்களை திங்கும் கழுகுகள் , ஓநாய்கள் , உடைந்து போன தேர்கள் , குதிரைகளின் சடலம் என எங்கு பார்த்தாலும் அழிவின் கோர முகங்கள் . இப்படி ஒரு அழிவை யாரும் பார்த்ததில்லை . கதை முடியும் தருணத்தில் கண்ணன் காந்தாரியை கண்களின் கட்டை அவிழ்த்து விடுகிறான் . அவளை கூட்டி கொண்டு யுத்த களத்துக்கு கூட்டி செல்கிறான் அவள் எதை பார்க்கிறாள் தன் மகன்கள் உருவாகிய அழிவை பார்த்து அஞ்சுகிராளா அவள் ? ஏன் மறுபடியும் கண்களை மூடி கொள்கிறாள் . நாவலின் முடிவில் மிக பெரிய ஒரு தனிமை உணர்வை கொண்டேன் . பாஞ்சாலியின் ஐந்து மகன்களும் கொல்லபடுகிறார்கள் . அதை பார்த்து பாஞ்சாலி கதறும் போது இந்த யுத்தத்தால் அதிகம் பாதிக்க பட்டவர்கள் பெண்கள் தானோ . அதன் வடுக்களை சுமந்து இந்த பூமி எனும் பெண்ணும் காலத்தில் முன்னகர்கிறாள் . ஒரு பெரும் மழை அச்தினாவதியை அதன் அசுதங்களில் இருந்து சுத்தம் செய்கிறது . மனிதனின் குரூரத்தின் சாட்சியாக அந்த யுத்தம் காலம் தோறும் மனிதர்களால் சொள்ளபட்டுவருகிறது .

Post

Anna Hazare

In General on August 28, 2011 by samratashok

I wrote this piece after the world cup , It was even more true now ,

“Everyone was excited , was in a hurry , finding an auto , running for their houses . Seldom you find the collective psyche of a society operating in unison , living the shared dreams,uttering the same prayers in a cosmopolitan like Bangalore .”

As Anna overcame the collective skepticism of the intellectuals of this nation . He stuck a chord with the common man to force the parliament to accept in principle to the key demands of JanLokpal bill.
In the last 25 years never has so many people participated directly or indirectly in a political process with such interest . Yes this was a middle class moment , yes this was out of the metros .
But any popular movement stems out of cities , out of the middle class educated class . But gradually its the people from the poorest sections who hold out for a long time , they form the backbone of any movement .

For people who say like ‘Nothing is going to change out of it ‘ or say ‘ The people who participate in this movement don’t even follow traffic rules etc ‘ or missing the whole point . May be their egos are hurt , its not befitting for them to participate in a mass movement as they cannot be part of something which involves the majority . The elites know how to direct the path of history , so they don’t believe in such slogan shouting by the masses . Its just a superiority complex masquerading as pseudo intellectualism .

For me a democratic process , a nonviolent movement is like functioning of the universe , everyone is just an atom performing their duties . Its just not the time to fuel once egos rather a time for duty or as Krishna said ‘Karmayoga’ .

Post

பிறவி பலன் (நகைச்சுவை)

In Rants on August 22, 2011 by samratashok

என் தங்கையின் facebook தளத்தை பார்த்து விட்டு உதயா என்னிடம் கேட்டா ‘யாரு பா ஜெயஸ்ரீ கண்ணன் ‘
அதுக்கு நான் ‘தெரிலையே பா யாருன்னு !  ஏன் கேக்கற ? ‘ .
அவள்  ‘அவங்க உன் சொந்தகாரங்க பா ‘  .
‘அப்படியா வேற பேருல தெரிஞ்சு வெச்சிருப்பேன் ‘ என்றேன் .
‘அவங்க அப்பா பேரு சடகோபன் , அம்மா பேரு ராஜலக்ஷ்மி ‘ என்றால் .
சட் என்று ஞாபகம் வந்தது ‘ அட நம்ம பாபுஜி ‘ அது என்ன அப்படி ஒரு பேரு என்று கேட்க வேண்டாம் . பட்ட பெயர்களுக்கு காரணம் தேவை இல்லை . சில நேரங்கள் அவர்களுக்கே உண்மையான பெயர்கள் மறந்து போகும் அளவுக்கு பட்ட பெயர்கள் சக்தி வாய்ந்தவை .
என்ன ஓட்டங்களை குறிக்கிட்டு உதயா கேட்டால் ,
‘அவங்க நம்ம நிச்சயத்துக்கு வந்தாங்களா ? ‘
‘இல்லை , அவங்க அப்பா வந்தார் , அவர் எனக்கு மாமா தாத்தா , அவரை கோபு தாத்தா என்று அழைப்போம்  .  ‘பாபு பாபு பாபு எங்கே , பாபு அப்பா கோபு எங்கே ‘ பாடல் கூட பிரசித்தம் ‘ உதயா வாய் விட்டு சிரித்து விட்டால் .

கோபு தாத்தா கொஞ்சம் முன்கோபி , கல்யாணங்களில் தன்னை ‘வா’ என்று சொல்ல வில்லை என்று அதிக முறை கோபித்து  கொண்டவர்களில்  முக்கியமானவர் .
எங்கள் சோழியா கிண்க்டோமில் நிச்சயங்கள் நிகழ்ந்தால் லக்ன பத்திரிக்கையை இவர் தான் செரி பார்ப்பார் . அந்த சங்க பலகை அவருக்கு மட்டுமே உரித்தானது .
நான் சின்ன பையனா இருக்கும் போது , தாத்தா பாட்டி தஞ்சாவூரில் இருந்தார்கள் . பள்ளி விடுமுறை நாட்களில் அங்கே சென்று விடுவோம் . தென்னை மரம் , பலா  மரம் சூழ அமைந்து இருக்கும் அழகான வீட்டில் இருந்தார்கள் .
அடிக்கடி இளநீர் , பறிக்க பட்ட தேங்காய்களை திருவி அதில் இளசான தேங்காயில் சர்க்கரை போட்டு சாப்பிட்டு , தினமும் மூன்று முறை ‘கேளடி கண்மணி’ பாட்டை மீண்டும் மீண்டும் கேட்டு காலத்தை கழிப்பேன் (தாத்தா வீட்டில் ஒரே ஒரே ஒரு கேசட் தான் இருந்தது ) . அங்கே விளையாட பசங்களே கிடையாது , வீட்டு மதில் சுவரில் அமர்ந்து சாலைகளில் போறவர்களை பார்க்கலாம் . தாத்தா வீடு திரும்பும் போது பாம்பே  ஸ்வீட்சில் முந்திரி பேடா ஒன்று வாங்கிவருவார் . சீக்கிரமே தூங்கி காலையில் நேரம் கழித்து எழுந்தால் கொஞ்சம் தாங்கும் .

அப்படி ஒரு நாளில் கோபு தாத்தா அங்கே வந்தார்  , அவருடைய கரிய முகத்தில் பட்ட நாமம பறக்க சாத்திண்டு   கம்பீரமாய் தோற்றம் அளித்தார் . நான் வீட்டு கூடத்தில் அமர்ந்து கொண்டு , தேங்காய் சக்கரை கலந்து சாப்பிட்டு கொண்டு இருந்தேன் . என்னை பார்த்து அவர் ஒரு வாக்கியம் சொன்னார் , அதை சொல்வதற்காகவே அங்கே வந்தவர் போல் , அதற்காகவே நான் பிறவி எடுத்து போல்  . அவர் சொன்ன அந்த வாக்கியம் இன்று வரை என்ன வழி நடத்துகிறது . அவர் சொன்னது ‘தேங்காய் சாப்பிட்டால் கழியும் டா ‘ :-) !!

அதை தொடர்ந்து , அவரை பற்றி எங்க அம்மா கூறும் போதெல்லாம் கேட்ப்பேன் யாரு அந்த ‘தேங்காய் சாப்ட்டா கழியும்னு சொன்னாரே அவரா ?

Post

மதுரை விஜயம்

In General on August 4, 2011 by samratashok

வாழ்க்கையில் ஆச்சரியம் என்னும் விஷயம் தான் எத்தனை மகத்தானது , ஆச்சரியங்கள் தான் நேற்றை இன்றில் இருந்து வேறுபடுத்துகிறது .

நம்மை நாமே ஆச்சரியபடுத்தி கொள்ள வேண்டி உள்ளது . ஆச்சரியங்கள் தான் நம் வாழ்வின் நிகழுவுகள் யாவும் முன்பே முடிவு செய்யப்பட்டது என்னும் என்னத்தை உடைக்கிறது . ஒரு மோசமான படைப்பாளி எழுதிய திரைப்படத்தின் முகியமில்லா கதாபாத்திரம் தான் நாம் என்னும் என்னத்தை உடைக்கிறது .
நினைத்து பாருங்கள் இவ்வளவு ஆச்சரியங்களை , தற்செயல் நிகழுவகளை ஒருவனாய் யாரும் வடிவு அமைத்திருக்க வாயிப்பில்லை .
என் வாழ்வில் இப்படி பட்ட ஆச்சரியங்களை எனக்கு பரிசளித்த கணங்கள் அனைத்துமே தற்செயலானவை , பெரிதும் எதிர் பார்க்காமல் நடந்தவை .
அந்த நொடிக்கான விதை பல காலமாக என்னுள் ஒரு பித்து நிலையாய் ஆட்கொள்ளும் . சில பயணங்கள் மேற்கொள்ளவேண்டும் என்றோ , 
இந்த மனிதரை சந்திக்க வேண்டும் என்றோ இல்லை ஒரு புத்தகத்தை வாசித்தே ஆக வேண்டும் போன்ற பித்து நிலைகள் . 

காவல் கோட்டம் நாவல் அப்படி ஒரு பித்து நிலையை என்னுள் உருவாக்கியது . இந்த நாவல் மதுரையின் அறநூறு ஆண்டுகால வரலாற்றை பற்றி பேசும் நாவல் . இந்த காலத்தில் மதுரையில் வாழும் மனிதர்களை பற்றி பேசும் நாவல் . வரலாற்று நாவல்கள் செய்யும் முக்கியமான விஷயம் , மறந்து போன மனிதர்களுக்கு ஒரு விலாசத்தை அளிக்கிறது . அவர்களின் மறந்து போன முகங்களை நமக்கு அறிமுக படுத்துகிறது . ஒரு விதமான நெருக்கத்தை நாம் உணர்கிறோம் , அவர்கள் நாம் தொடகூடிய தூரத்தில் இருப்பதாய் உணர்கிறோம் . இவர்களின் வாழ்க்கை நம்மை பாதிக்கிறது , எவ்வளவு தான் காலம் கடந்தாலும் மனிதர்களின் அடிப்படை தேடல் தொடர்ச்சியாய் நிகழும் ஒரு செயல் . கால வெளியில் தொடர்ந்து மனிதன் கேள்விகளை தொடுத்த வண்ணம் உள்ளான் , அவை  என்றும் மனிதனுக்கு தேவையான ஒன்று தான் . 

காவல் கோட்டம் நாவல் கதை சுருக்கம் : 

அறநூறு ஆண்டு காலமாய் மதுரை மண்ணில் காவலுக்கும் , களவுக்கும் இருக்கும் தொடர்பை  பற்றி பேசுகிறது இந்த நாவல் .
நாவலின் தொடக்கத்தில் மதுரையை நகரத்தை வடக்கில் இருந்து வந்த சுல்தானிய படைகள் பாண்டிய அரசனை தோற்கடித்து மதுரையை கைபற்றுகிறது .
இதனை தொடர்ந்து மதுரையின் காவலாளிகளாக இருந்த கள்ளர் சமூகத்ததை சேர்ந்தவர்கள் காவல் உரிமையை இழந்து திருடர்களாக மாறுகிறார்கள் .
திருட்டே ஒரு தொழிலாக மாறி , அதை சார்ந்த ஒரு சமூகமாக இவர்கள் மாறுகிறார்கள் . காலம் மாற்றத்தில் நாயக்கர்கள் மதுரையை மீண்டும் கைபற்றியவுடன் இவர்கள் காவல் உரிமை மீண்டும் கிடைக்கிறது .
இப்படியே மதுரையின் வரலாறு தோறும் இவர்கள் சில நேரங்களில் காவல்காரர்கலாகவும் , சில நேரங்களில் திருடர்களாகவும் வாழ்கிறார்கள் .’கஞ்சியை உறுதி செய்ய காவலும் , காவலை உறுதி செய்ய களவும் ‘ என்ற ஒரு வாழ்க்கை இவர்களுடையது .

இந்த நாவலை படித்த பொழுது , மதுரையின் வரலாற்றின் மிச்சத்தை , அதன் இன்றைய காலத்தில் இருக்கும் சில வரலாற்று சின்னங்களை சென்று பார்க்க வேண்டு என்று தோன்றியது . 
முக்கியமாக திருமலை நாயக்கர் கட்டிய புதுமண்டபம் (எ) வசந்த மண்டபம் , திருமலை நாயக்கர் மஹால் , பத்து தூண் , விளக்கு தூண்  போன்ற இடங்கள் . இதை தவிர மதுரை கள்ளர்கள் காவல் காத்த தெருக்களில் நடந்து செல்ல வேண்டும் என பட்டது . 

மதுரை :
30 ஆகஸ்ட் அன்று திருச்சியில் இருந்து மதுரை சென்று அடைந்தேன் , மதிய உணவு அருந்திவிட்டு கோவில் இருக்கும் சித்திரை வீதிக்கு சென்றேன் . அங்கு இருந்த கோபுர சிற்பங்களை பார்த்து மெய் மறந்தேன் , தமிழ் நாட்டுக்கு ஒரு சிறப்பு இருப்பதாய் ஜெயமோகன் சொல்வார் , ‘தமிழ் நாட்டில் தான் உலகத்தின் சிறந்த சிற்பங்கள் கோவில்கள் தோறும் நிறுவப்பட்டுள்ளது , அதே போல் உலகின் அசிங்கமான் அரசியல் சிலைகளும் தமிழகத்தில் தான் அதிகம் ‘ . எவ்வளவு அழகான தத்ரூபமான சிற்பங்கள் .

புது மண்டபம் :


இன்று அங்கு செல்பவர்களுக்கு அது வரலாற்று முக்கியத்வம் வாயிந்த இடம் என்பதே
தெரியவில்லை . பெரிதும் பெண்கள் உடைகள் தெய்ப்பதர்காகவே அங்கு செல்கிறார்கள் .
மதுரையை சேர்ந்த ஒரு நண்பனிடம் , மதுரை போய் வரலாற்று சிறப்பு உள்ள இடங்களை பார்க்க இருப்பதாய் சொன்ன உடன் ஒரு நமிட்டு – சிறுப்பு சிரித்தார் .
இன்று மதுரை அதன் வரலாற்றை மறந்து விட்டதோ என்று படுகிறது . வசந்த மண்டபம் , தெற்கு சித்திரை வீதியில் , தெற்கு கோபுரத்திற்கு நேர் எதிரில் இருக்கும் மண்டபம் .
திருமலை  நாயகர்களால்  கட்டப்பட்ட முக்கியமான மண்டபம் , அழகான சிற்ப்பங்கள் நிறைந்த மண்டபத்தின்  உல் பகுதிகள் பெரிதும் இன்று மூட பட்டு உள்ளது . அந்த மடபத்தின் நான்கு ஓரங்களில் இருக்கும் பகுதிகளை மட்டும் தான் காண முடியும் . மண்டபத்தின் மூடப்பட்ட இடத்தில் முதல் பத்து நாயக்கர் மன்னர்களின் சிற்பங்கள் இருக்கிறது , இதை தவிர முகப்பில் இருக்கும் குதிரை வீரர்களின்  சிற்ப்பங்கள் , எண்ணற்ற யாளி சிற்பங்கள் குறிபிடத்தக்கவை .
பத்து தூண் :

இது புதுமண்டபத்துக்கு பின்னால் உள்ள ஒரு பகுதி , முன்பு எப்பவோ அரண்மனையின் முகப்பு பகுதியாய் இருந்து இருக்க வேண்டும் . பிறகு  படையெடுப்புகளில் இடிக்க பட்டு இருக்கலாம் என்று சொல்கிறார்கள் . பெரும் உயர தூண்கள் , ஒரு முகப் வாயில் போல் , இருபுறமும் கருங்கல் சுவர்கள் நடுவில் இந்த உயர் தூண்கள் .
இந்த தூண்கள் காலம் தோறும் பல்வேறு கதைகள் சுமந்து கேட்பார் அற்று கிடந்தன .

விளக்கு தூண் :

மதுரையின் பிரிட்டிஷ் கலெக்டராக பணியாற்றிய ப்லாக்பன் பனி ஒய்வு பெற்று செல்லும் போது , அவரின் நினைவாக எழுப்ப பட்டது தான் இந்த விளக்கு தூண் .
ப்லாக்பன் தான் மதுரையை சுற்றி உள்ள கோட்டை சுவர்களை இடித்தவன் . மதுரையின் கோட்டை , நாயக்கர் அரசர்களில் முதலும் மற்றும் சிறந்த அரசரான
விஸ்வநாத  நாயக்கரால் கட்டப்பட்ட கோட்டை .
இந்த இடிப்பு தான் மதுரையை தன் கட்டுபாட்டில் கொண்டு வருவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் செய்த முதல் முயற்சி .

இந்த கோட்டையை இடித்தால் மதுரை வளர்ந்தது என்றாலும் , வரலாற்றின் ஒரு மிக பெரிய ஆவணத்தை இடித்தது ஒரு தவறு என்று அவர் உணர்ந்திருப்பாரா என்று தெரியவில்லை .

திருமலை நாயக்கர் மஹால் .
மதுரையின் நாயக்கர் அரண்மனையாக திருமலை நாயக்கரால் கட்டப்பட்டு , பின்பு பிரிட்டிஷ் ஆட்சியின் அதிகார மையமாக பணியாற்றிய மஹால் .
உயரமான தூண்களால் கட்டி எழுப்பப்பட்டுள்ள மிக பெரிய மஹால் . தூண்களை இணைக்கும் பகுதிகளில்  அழகு – அழகாய் செதுக்க பட்டுள்ள சிலைகள் .
யாளிகள் யானைகளின் தும்பிக்கை கடித்து கொண்டு இறக்கைகளை  விரித்து நிற்கும் சிலை . யானை தூணின் அடிபகுதியில் இருந்து மேல் எழும் , அதற்க்கு மேல் யாளிகள் , இதற் போல் எண்ணற்ற  அடுக்களாய் கட்ட பட்ட தூண்கள் . வானை நோக்கி எழ துடிக்கும் ஒரு பேரரசின் ,
அதன் மன்னர்களின் அதிகாரத்தை வானுக்கு சொல்பவை போல் .
மகாலின் நடு பகுதியில் மேல் உள்ள  வெட்டை வெளி , வெளிச்சமும் காற்றும் அதன் வழியாக மாகலின் உள்ளே வந்து அரண்மனையை நிரப்பியது.
அரண்மனையின்  வெட்டை வெளியான பகுதியை சுற்றி நான்கு புறமும் தூண்களின் அழகான சிற்பங்கள் .
 ஒரு பகுதியின் யாளி சிற்பங்கள் மட்டும் சிவப்பு - மயில் பச்சை சாயம் பூச பட்டு இருந்தன . சிலைகள் பளிங்கு கற்களால் செய்ய பட்டவை போல் வெண்மையாக இருந்தன .
அரண்மனையின் மேல் சுவர்களின் வரைய பட்டுள்ள வண்ணங்களும் , கோலங்கள் போன்ற படங்களும் மேலும் அழகை கூட்டியது .

இதனை தொடர்ந்து எழுத்தாளர் ஜெயமோகனை சந்திப்பதாய் திட்டம் . அவர் மதுரையில் அயோத்திதாச பண்டிதரை பற்றி பேசுவதற்காக வந்து இருந்தார் .

அவருடன் இலக்கிய நண்பர்கள் சிலரை சந்திக்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன்.
அவரை சந்திக்க நியூ காலேஜ் ஹோவ்சுக்கு சென்றேன் . அதை பற்றி தொடர்ந்து வரும் கட்டுரைகளில்.

t

மாசனபு ·புகோகா , நவீனத்வ சித்தாந்தத்தின் உச்சத்தில் ஒரு மாற்று விவசாயத்தை உலகுக்கு பரிசு அளித்தவர் .

அவருடைய ‘ஒற்றரைவைக்கோல் புரட்சி’ இயற்க்கை சார்ந்த வாழ்க்கைக்கான ஒரு வரைபடம் என கூறலாம் .

இளமை பருவத்தில் புகோகா தாவரங்கவியல் ஆராய்ச்சி
மாணவன் , பல்வேறு கருத்துக்களால் அலைகிழிக்கபட்டு
சுற்றி திரிகிறார் . ஒரு தருணத்தில் குப்பை கூடாரத்தில் வளர்ந்து
கிடக்கும் ஒரு வைக்கோலை கண்டு அதை புரிந்து கொள்ள காடுகளிலும் , மலைகளிலும் திரிகிறார் .

மலையின்  உச்சியில் ,இயற்கையும் தானும் மட்டும்
அமர்ந்து இருக்கும் காலை பொழுதில் ஒரு பறவையின் கீறிச் சத்தம்  கேட்டு அவர் மனம் நெகிழி தன் வாழ்வின்
ஆதாரத்தை கண்டு கொண்டார் .

ஜென் தரிசனத்தின் செயல் விளக்கம் ஆக  இவரின் விவசாயத்தை  விளக்கலாம் . இயற்க்கை மனிதனுக்கு எண்ணற்ற செல்வதை அளிக்கிறது . மனிதன் தன் அறிவின் ஆதார இயல்பினால் , அதை பிரித்து  அறிய முயல்கிறான் . இயற்க்கை ஒரு பேர் இருப்பு அதை மனிதன் அதன் ஒட்டுமொத்த தன்மைய புரிந்து கொள்ளமால் செய்யும் மாற்றங்கள் அழிவையே நோக்கி செலுத்தும் என்பதே  புகோகாவின் வாதம் .
நவீன  விவசாயம் மண்ணுக்கும் – மனிதனுக்கும் இருந்த உறவை முற்றாக துண்டித்துவிட்டது . உற்பத்தியை மட்டும்  உயர்த்தும்  நோக்கு கொண்டு உலகம் முழுக்க பரவியிருக்கும் இந்த விவசாய முறை மண்ணை முடமாக்கி , விவசாயிகளின் பாரம்பரிய அறிவை , அவர்கள் நூற்று ஆண்டுகளாய் கற்று வந்த மரபான விவசாயத்தை அழித்து விட்டது .

இதன் காரணமாக புகோகா காண்பது மனிதனின் அபத்தமான ஆசை . நுகர்வோர் , இயற்க்கை-சார்ந்த வாழ்க்கையை கைவிட தொடங்கிய உடன் , விவசாயிகளும் அதற்க்கு ஏற்ப மாறுகிறார்கள் . உதாரணமாக நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் , பெரும்பான  பழங்கள் வருடம் முழுவது கிடைக்கும் வாயுப்பு இருக்கிறது. இதனால் விவசாயிகளும் பூச்சி-கொள்ளிகளும் , உரங்களும் . மரபு-அணு மாற்று முறையால்  உருவாக்கப்படும் விதைகள் பயன் படுத்துகிறார்கள் .
உலகமே ஒரு சந்தை என்னும் உலகளாவிய  மாற்றம்  மேலும் விவசாயிகளின் நிலைமையை பாதித்து இருக்கிறது .
 விவசாயம் வரும் காலங்களில் இந்தியா போன்ற நாடுகளில் பெரும் கம்பெனிகள் கைபற்றி கொள்வார்கள் என எதிர்பாக்கலாம் , நாடு செல்லும் திசை அதுவே .

புகோகா , காந்தி போன்றவர்கள் நவீனத்தின் கோர முகத்தை முன்பே கண்டு கொண்டார்கள் . காந்தி தன்னுடைய ‘ஹிந்த்-ஸ்வரசில்’ ஒரு விரிவான பின்-நவீனத்வ சமூதாயத்தின் வரைபடத்தை அளிதிரிந்தார் . ஆனால் அப்படி ஒரு வாழ்க்கை த்யாகத்தின் அடிப்படையில் அமையும் ஒன்று , அதை பெரும்பான்மை ஏற்கும் நாள் மிக தொலைவில் இருக்கிறது .

புகோகா அளிக்கும் முக்கியமான சிந்தனை என்பது முழுமை நோக்கு , மேலை சிந்தனை இயற்கையை புறவயமாக  நோக்கி அதை ஆராய்ந்து இயற்கையை அளக்க முயல்கிறது . இதை ·புகோகா ஏற்பதில்லை , அவர் இந்த இயற்க்கை ஒரு பேரிருப்பாக கருதுகிறார் . நம் மனங்களில் நாம் அறியும் விஷயங்களை வயித்து இயற்கையை முழுமையாக அறிய முடியாது என்பது அவர் பார்வை .

 ஐன்ஸ்டீனின் சார்பு தத்துவத்தை ஒரு அரைகுறை ஐய்ரோப்பிய நோக்கு என்று புகோகா தாண்டி செல்கிறார் .

அடிப்படையான இந்த சித்தாந்த பார்வை தான் புகோகா அளிக்கும் அனுபவம் .

ஒற்றரைவைக்கோல் புரட்சி

on July 8, 2011 by samratashok

Leave a Comment

Follow

Get every new post delivered to your Inbox.